விக்கிரவாண்டி தேர்தலில் நாங்களும் பணம் தரவில்லை: அமைச்சர் ரகுபதி!

சென்னை: விக்கிரவாண்டி தேர்தலில் நாங்களும் பணம் தரவில்லை, எதிர்க்கட்சியினரும் பணம் தரவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மக்கள் வாக்களித்தனர்; அதிமுகவின் வாக்குகள் எங்களுக்குதான் கிடைத்துள்ளது. இதனை எப்படி தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பா.ம.க. கூறுகிறது என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் தங்களுக்கு விழும் என்று பாமக நினைத்தது ஆனால் கிடைக்கவில்லை. விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி மிகப்பெரிய எழுச்சியை முதலமைச்சருக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post விக்கிரவாண்டி தேர்தலில் நாங்களும் பணம் தரவில்லை: அமைச்சர் ரகுபதி! appeared first on Dinakaran.

Related Stories: