இந்த வழக்கில் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடுகிறோம். தமிழ்நாட்டில் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஆணையிடுகிறோம். கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய ஆட்சியர்கள், மீட்பு பணி மற்றும் சேத விவரங்கள் பற்றி அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள். இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும்.
நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரி, சாலை, கட்டுமான திட்டங்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் எடுத்த முன்னெச்சரிக்கை பற்றி நீலகிரி, கோவை ஆட்சியர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்தனர்.
The post வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?: தேசிய பசுமை தீர்ப்பாயம் appeared first on Dinakaran.
