ராகுல் காந்தி விஷயத்தில் நீதி வென்றே தீரும்: வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ அரசுக்கு எதிராக தொடர்ந்து மக்கள் சக்தியை திரட்டி வரும் ராகுல்காந்தியின் குரலை ஒடுக்குவதற்கு பாஜ அடக்குமுறைகளை ஏவி விடுகிறது. முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி தொடங்கிய ஒற்றுமை நடைபயணம் மக்கள் மன்றத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளால் மோடி தலைமையிலான பாஜ அரசு ராகுல்காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. மக்களாட்சியின் மாண்புகளை புதைக்குழிக்கு அனுப்பி வரும் பாசிச பாஜவின் இத்தகைய செயல்கள் ஒருபோதும் வெற்றிப்பெறப் போவது இல்லை. நீதி வென்றே தீரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ராகுல் காந்தி விஷயத்தில் நீதி வென்றே தீரும்: வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: