யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது: நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் நுழைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு. மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.

தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தி கரையேறுபவர்களும் உண்டு; மூழ்குபவர்களும் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம், மக்களே இறுதி எஜமானார்கள். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

The post யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது: நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Related Stories: