இந்த நிலையில், அபிஜீத் தோமர் – குணால் சிங் ரத்தோர் ஜோடி அபாரமாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்தது. தொடக்க வீரர் தோமர் 106 ரன் (129 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), குணால் சிங் 79 ரன் (65 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் வெளியேற, அரியானா கை ஓங்கியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுக்க, ராஜஸ்தான் 48 ஓவரில் 257 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ராகுல் சாஹர் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அரியானா பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், சுமித் குமார் தலா 3, காம்போஜ், திவாதியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 30 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற அரியானா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
The post விஜய் ஹசாரே டிராபி: முதல் முறையாக அரியானா சாம்பியன் appeared first on Dinakaran.