ராகுல் வழக்கில் ஏப்.20ல் தீர்ப்பு

சூரத்: மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த ராகுல் அப்பீல் மனு மீது ஏப்.20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சூரத் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

2019ம் ஆண்டு ஏப்.13ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,’எல்லா திருடர்களுக்கும் மோடி என்பது எப்படி பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது’ என்று பேசினார்.

இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராகுல்காந்தி, சூரத் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி ஆர்.பி மொகேரா முன்னிலையில் விசாரணை நடந்தது. இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி மொகேரா வரும் 20ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

The post ராகுல் வழக்கில் ஏப்.20ல் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: