கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்

டேராடூன்: மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 8 நண்பர்களுடன் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு வந்தார். அந்த பெண் இரவு அங்கேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் குல்தீப் நீகியின் உதவியை நாடினார். உதவி ஆய்வாளர் போலீஸ் முகாமில் தங்கி இருக்குமாறும் பெண் காவலரை துணைக்கு அனுப்புவதாகவும் உறுதி அளித்தார். ஆனால் பெண் காவலர் வரவில்லை. மாறாக இரவு மது போதையில் முகாமுக்கு வந்த உதவி ஆய்வாளர் குல்தீப் பெண் பக்தரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் குல்தீப் மற்றும் மற்றொரு உதவி ஆய்வாளர் மஞ்சுள் ராவத் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: