கோயில் வளாகத்தில் பக்தர்கள், நெய் தீபம் ஏற்று சுவாமியை வழிபட்டனர். இந்த தீபம், கோயில் முழுவதும் பிரகாசமாக ஜொலித்தது. தொடர்ந்து ஆன்மீக இன்னிசை கச்சேரி நடந்தது. இரவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஞானமணி உட்பட நிர்வாகிகள், பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
The post உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற இரட்டைத்தாலீஸ்வரர் ஆலயத்தில் வருஷாபிஷேகம், லட்சதீப பெருவிழா appeared first on Dinakaran.
