மேலும் அதிபர் டிரம்ப் இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிபர் டிரம்ப் கூறுகையில்,‘‘அமெரிக்கா இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தை செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் சிறந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டு இருக்கிறோம். அதில் ஒன்று விரைவில் வரப்போகிறது. ஒருவேளை அது இந்தியாவுடனான மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கலாம். அதிகாரிகள் நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்துகொண்டு கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறார்கள். நாங்கள் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் அனைவருடனும் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை. சிலருக்கு நாங்கள் கடிதம் அனுப்பி மிக்க நன்றி கூற போகிறோம். 25சதவீதம், 35 சதவீதம், 45சதவீதம் செலுத்தப்போகிறீர்கள் என்று குறிப்பிடப்போகிறோம்” என்றார்.
The post அமெரிக்கா- சீனா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது: விரைவில் இந்தியாவுடனும் ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் தகவல் appeared first on Dinakaran.
