மீன்பிடி துறைமுகத்திலிருந்து 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பைபர் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 7 மீனவர்களும் படகை பிடித்து கொண்டு தத்தளித்து கொண்டிருந்தனர். அதனை பார்த்த புன்னக்காயலை சேர்ந்த மீனவர்கள் விரைந்து சென்று 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
The post தூத்துக்குடியில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 7 மீனவர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.