இந்நிலையில், சென்னை – தூத்துக்குடி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியது. அதேபோல் காலை 5.45, 10.15 மணிக்கு தூத்துக்குடிக்கு செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து காலை 9.40, பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
The post தத்தளிக்கும் தூத்துக்குடி.. கனமழை காரணமாக சென்னை – தூத்துக்குடி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் இன்று ரத்து..!! appeared first on Dinakaran.