குழந்தை இல்லாததால் விரக்தி வேளாங்கண்ணி விடுதியில் விஷ ஊசிபோட்டு கேரள தம்பதி தற்கொலை

நாகப்பட்டினம்: குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த கேரள தம்பதி வேளாங்கண்ணி விடுதியில் தற்கொலை செய்து கொண்டனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் கருகுட்டி மாவேலி ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஆண்டோவர்கீஸ் (34). இவரது மனைவி ஜிஸ்மால்(29). திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதற்காக பல இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் கடன் தொல்லையும் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வேளாங்கண்ணிக்கு வந்த தம்பதியர், அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அங்கு ஆண்டோ வர்க்கீஸ், எலி பேஸ்டை ஊசி மூலம் தனது உடம்பில் செலுத்தினார். இதில் மயங்கி விழுந்த அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை இறந்தார். இதையறிந்த மனைவி ஜிஸ்மால், மருத்துவமனையில் இருந்து வேளாங்கண்ணியில் தங்கி இருந்த அறைக்கு வந்து மீதம் இருந்த எலிபேஸ்டை ஊசி மூலம் உடலில் செலுத்தினார். விடுதி ஊழியர்கள், அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரும் இறந்தார்.

The post குழந்தை இல்லாததால் விரக்தி வேளாங்கண்ணி விடுதியில் விஷ ஊசிபோட்டு கேரள தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: