தண்டவாளத்தில் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் – சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை ரயில்வே ஊழியர்கள் வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 8.20 மணியளவில் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனைக்கண்ட ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், சென்னையில் இருந்து அரக்கோணம் – காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. இதையறிந்த அவர்கள், உடனடியாக அந்த ரயிலை நடுவழியில் நிறுத்தினர். இதேபோல், சென்னை – பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தினர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர். பின்னர், அங்கு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.

The post தண்டவாளத்தில் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது appeared first on Dinakaran.

Related Stories: