இதைத் தொடர்ந்து நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து தமிழ்நாடு டிஜிபி நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியதையடுத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 (எ), 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில், நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேரடியாக அழைத்து விசாரிக்க அவருக்கு 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ காவல்துறை அனுப்பியுள்ளது.
The post நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ்!! appeared first on Dinakaran.