திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதிய வாயிற்கதவுகளை திறப்பதை கண்டு மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகளும், நமது இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான புதிய வாயிற்கதவுகளைத் திறப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு மாணவர்கள் சேர்ந்துள்ளது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவில், தமிழ்நாட்டின் தரமான கல்வியோடு – மாணவர்களின் திறன் வளர்க்கும் நமது திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகளும், நமது இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான புதிய வாயிற்கதவுகளைத் திறப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்!. நான் முதல்வன் எனப் பெருமை கொள்ளும் ஒளிநிறைந்த நாளை நம் இளைஞர்களுக்காக! என்று கூறியுள்ளார்.

The post திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதிய வாயிற்கதவுகளை திறப்பதை கண்டு மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: