தகராறு முற்றிய நிலையில், இருவரும் தாங்கள் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பழனியை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் பழனிக்கு காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து, படுகாயமடைந்த பழனியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், காத்தவராயன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பழனியை வெட்டிய சரவணன், காத்தவராயன் ஆகிய இருவரும் பிச்சைதான் எடுத்து வந்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோயில் வாசலில் பிச்சை எடுப்பவர்கள் அடிக்கடி இதுபோன்ற தகராறில் ஈடுபடுவதாகவும், இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சங்கடப்படுவதாகவும் கூறி பிச்சைக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வடிவுடையம்மன் கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
The post திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் பிச்சை எடுப்பதில் தகராறு ஒருவருக்கு சரமாரி வெட்டு: இருவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.