திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனி, ஞாயிறு, கிருஷ்ணஜெயந்தி என கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்தது.

நேற்று 76,910 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 30,320 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.26 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: