ஒன்றிய அமைச்சரின் தலைக்கு ஒரு ஏக்கர் நிலம்: தெலங்கானா காங். எம்எல்ஏ அறிவிப்பு

ஐதராபாத்: அமெரிக்காவில் சீக்கியர்கள் குறித்து ராகுல் கூறிய கருத்தை விமர்சித்த ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, வெடிகுண்டுகளை உற்பத்தி செய்பவர்கள் ராகுல்காந்திக்கு ஆதரவாக இருப்பார்கள், அவர் நம்பர் ஒன் தீவிரவாதி என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவின் கானாபூர் காங்கிரஸ் எம்எல்ஏ வேத்மா போஜ்ஜூ போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘அமைச்சர் ரவ்னீத்தின் தலையை கொண்டு வருபவர்களுக்கு எனது தந்தை சம்பாதித்த 1 ஏக்கர் நிலத்தை தருகிறேன் என்றார்.

The post ஒன்றிய அமைச்சரின் தலைக்கு ஒரு ஏக்கர் நிலம்: தெலங்கானா காங். எம்எல்ஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: