இதில் அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையாளர் சங்கர், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் மற்றும் மக்கள் பிரதிநிதி பார்வையாளர்களாக சுப்பிரமணியன், கருப்பன், மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 541 ரூபாய், 1100 கிராம் தங்கம், 29,300 கிராம் வெள்ளி, 80 ஆயிரம் கிராம் பித்தளை, 6,500 கிராம் செம்பு, 2,500 கிராம் தகரம் வருவாயாக கிடைத்துள்ளன. மேலும் 417 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ.2.70 கோடி appeared first on Dinakaran.