இந்த மனு நீதிப்தி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனு தாரரின் கோரிக்கை மனுவில் இருந்து, அவர் முன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை கொண்டிருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது என்று குறிப்பிட்டார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய செயல் என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான செயல் மட்டுமல்லாமல், அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி மனு தாரரான கிராம பஞ்சாயத்து தலைவரான மோகன் என்பவருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டது, மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கபட்டது என்று விளக்கமளிக்கவும், மோகன் என்பவருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
The post மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம்: கிராம பஞ்சாயத்து தலைவர் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.