சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நாகமங்கலம் கிராமத்தில் மந்தை முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலிலில் நேற்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின்போது முஸ்லீம் ஜமாத்தார்கள் இந்துக்களுடன் இணைந்து பள்ளிவாசலில் இருந்து மேளதாளத்துடன் பழங்கள், வஸ்திரங்கள், உள்ளிட்ட பூஜை சீர் பொருட்களை முக்கிய வீதிகள் வழியாக சுமந்து சென்று கோயிலை அடைந்தனர். அங்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்து, முஸ்லிம் சகோதரத்துவத்துடன் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
The post கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டு வந்த முஸ்லீம்கள் appeared first on Dinakaran.