இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த ரூ.பல லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ பனியன் துணிகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் எரிந்து சேதமானது. தொடர்ந்து முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் தீ விபத்தில் வெப்பத்தின் காரணமாக சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ appeared first on Dinakaran.