இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பீகார் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கொள்ளை கும்பல்கள் பிடுகுரல்லா அருகே ரயில்களில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வருவதும், இந்த கும்பலில் 7 பேர் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த ஒரு வாரத்திற்குள் இதேபோல் ரயில்களில் 2 முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளன. இந்நிலையில் நேற்று காலை 3வது முறையாக கொள்ளை முயற்சி நடந்துள்ளது ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
The post ஆந்திராவில் பரபரப்பு; ரயிலில் கொள்ளை முயற்சி போலீசார் துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.
