மதுரை : கோயிலை பூட்டிவைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மதுரை உத்தப்புரம் கோயிலை திறக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் கிளை இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி எந்த கோயிலையும் பூட்டக்கூடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.