மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 16.08.2024 முதல் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவியை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் C.T.செல்வம் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. தேர்வுக் குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பினை 04.10.2024 மாலை 6.00 மணி வரை நீட்டித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: