இளம்பெண் கூட்டு பலாத்கார கொலை: ஆசிட் வீசப்பட்ட நிலையில் கிணற்றில் சடலம் மீட்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டம் டோடாபிம் பகுதியின் மோகன்புராவில் வசிக்கும் 18 வயது இளம்பெண் ஒருவர் நேற்று மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பெண்ணை போலீசார் தேடி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கிணற்றில் அந்தப் பெண் கிடப்பதாக தகவல் ெவளியானது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி பாபு லால் கூறுகையில்:
கொலையான பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி கொன்றுள்ளது. பின்னர் முகம் அடையாளம் தெரியாத வகையில் கிணற்றுக்குள் சடலத்தை வீசிவிட்டு சென்றுள்ளது. பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து ஆசிட் வீசி கொன்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகிறோம். அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே பூர்வாங்க விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post இளம்பெண் கூட்டு பலாத்கார கொலை: ஆசிட் வீசப்பட்ட நிலையில் கிணற்றில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: