மகாராஷ்டிராவின் சாங்லி தொகுதி சுயேச்சை எம்பி விஷால் பிரகாஷ்பாபு பாட்டீல் பேசுகையில், ‘‘குழந்தை பருவத்தில் ராபின்ஹூட் கதைகளை படித்திருப்போம். அவர் பணக்காரர்களிடம் பணத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு தருவார். ஆனால் இங்கு தலைகீழ் ராபின்ஹூட் நிர்வாகம் நடக்கிறது’’ என்றார். இதன்பின்னர், 45 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதம் தொடரும்.
* மூலதன ஆதாய வரியில் பணிந்தது ஒன்றிய அரசு
சொத்துக்கள் விற்பனையில் நீண்ட கால மூலதன ஆதாய வரியில், மக்களுக்கு பலன் அளிக்கும் இன்டெக்சேஷன் சலுகையை நீக்கிவிட்டு, வரி விதிப்பை 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்து ஒன்றிய அரசு நிதி மசோதாவில் திருத்தம் செய்தது. இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நிதி மசோதாவில் முக்கிய திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார். அதாவது, விற்கப்படும் சொத்துக்கள் ஜூலை 23, 2024க்கு முன் பதிவு செய்யப்பட்டிருந்தால் பழைய முறைப்படி இன்டெக்சேஷன் சலுகையுடன் 20 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தலாம் அல்லது புதிய முறைப்படி இன்டெக்சேஷன் இல்லாமல் 12.5 சதவீத வரியை செலுத்தலாம். இதன் மூலம் மீண்டும் பழைய நடைமுறை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
* காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி ஏன்?
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியம்கள் மீதான ஜிஎஸ்டியை எம்பிக்கள் நீக்கக் கோரியது குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘‘ஜிஎஸ்டியில் 75 சதவீதம் மாநில அரசுகளுக்குத்தான் செல்கிறது. ஜிஎஸ்டி வருவதற்கு முன், அனைத்து மாநிலங்களும் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு வரி விதித்து வந்தன. அதன் அடிப்படையில்தான், ஜிஎஸ்டி அமல்படுத்திய போது, 18 சதவீத வரி கொண்டு வரப்பட்டது. பிரீமியம்களுக்கு வரி என்பது புதிதான ஒன்றல்ல’’ என்றார்.
The post எதற்கெடுத்தாலும் வரி, வரி செலுத்தினாலும் வரி நிதி மசோதா அல்ல… வரி பொறி மசோதா: மக்களவையில் எதிர்க்கட்சிகள் விளாசல் appeared first on Dinakaran.