தர்மேந்திரபிரதான் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் என்று தனது தடித்த நாக்கின் மூலம் அநாகரிகமாகப் பேசியுள்ளார். உலகத்தில் 3300 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி தமிழ். நாகரீக, பண்பாட்டிற்கு சொந்தக்காரர்களான தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசுவது அநாகரிகத்தின் உச்சமாகும். பாரம்பரியமிக்க தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்ற அவையில் பேசியிருப்பது வன்மையானக் கண்டனத்துக்குரியது. உடனடியாக மோடி இதற்கான வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பொன்குமார் கூறியுள்ளார்.
The post 8 கோடி தமிழர் அவமதிப்பு ஒன்றிய அமைச்சருக்கு பொன்குமார் கண்டனம் appeared first on Dinakaran.
