இதற்கென்று அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்யேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும். மக்களவை தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது. ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தாலும், மாநில அரசும் தங்களுக்கான அதிகாரங்களை பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும்.
இதன்மூலம் மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்த தரவுகள் முழுமையாக சேகரிக்கப்படும்.
இடஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக, வாழ்வாதார, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்பட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி இருக்கின்றனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
The post தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக தலைவர் விஜய் கோரிக்கை appeared first on Dinakaran.
