நவ.23 வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

டெல்லி: நவ.23 வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார். தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

The post நவ.23 வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: