இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை , ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.