இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி இன்று காலை பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளை பெரியதெரு, பாலாஜிநகர், காந்தி தெரு, பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யும் பணிகளை வேகப்படுத்தினர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், எந்த நேரத்திலும் அதிகாரிகள், ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினர். மேலும் மழை பாதிப்பு குறித்து புகார் வந்ததும் உடனுக்குடன் சரி செய்வதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபடவேண்டும். மழை பாதிப்பு குறித்த புகார்களை பொதுமக்கள் எந்த நேரத்திலும் தன்னிடம் தெரிவிக்கலாம் என எம்எல்ஏ இ.கருணாநிதி கூறியுள்ளார்.
The post தாம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.