இதையடுத்து மது பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்களை ஏற்றிவந்த மினி வேன் ஓட்டுநரை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது மினி வேனை ஓட்டிவந்தவர் ஏழுமலை என்பது தெரியவந்தது. மேலும் பம்மலில் சிலர் தன்னிடம் மதுபானங்களை மினி வேனில் ஏற்றி கோவிலாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கொடுக்கும்படி கூறியதால் கொண்டுவந்ததாக கூறியது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தாம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.3 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.