மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு அறக்கட்டளை ஆபீசை கட்சியினர் முற்றுகை

அவிநாசி: சென்னை, அசோக் நகரில் அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் முட நம்பிக்கை கருத்துகளை பேசிய விவகாரம் தொடர்பாக திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியும், பெண்களை போகப் பொருளாக சித்தரித்து யூடிப்பில் பேசுவதையும் கண்டித்து, அறக்கட்டளையின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை ஆய்வு செய்யக்கோரி திருப்பூரில் குளத்துப்பாளையத்தில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று காலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

The post மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு அறக்கட்டளை ஆபீசை கட்சியினர் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: