*1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டதால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரயில் கேட் திறந்த பிறகு இந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் நேற்று மதியம் எவ்வித முன்னறிவிப்பின்றி ரயில் இன்ஜின் மட்டும் பாவூர்சத்திரம் ரயில்வே நிலையத்திலிருந்து பராமரிப்பு பணி மேற்கொள்வதாக கூறி தென்காசி-நெல்லை தேசிய நெடுஞ்சாலை பாவூர்சத்திரம் ரயில்வே கேட் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் மூடப்பட்டது.
இதனால் இருபுறமும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. இதில் 108 ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சைக்காக தென்காசி மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post எந்தவித முன்னறிவிப்புமின்றி பாவூர்சத்திரம் ரயில்வே கேட் திடீர் மூடல் appeared first on Dinakaran.
