மாணவி கர்ப்பம்: ஆசிரியர் கைது

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள முத்துசேர்வாமடம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வில்வேந்திரன்(34). இவர், கடலூர் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கர்ப்பமான சிறுமி வில்வேந்திரனிடம் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். அப்போது திருமணத்திற்கு மறுத்த அவர் கர்ப்பத்தை கலைத்து விடு. இல்லை என்றால் ஊர் முழுவதும் கூறி அவமானப்படுத்துவேன் என மிரட்டி உள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமியின் கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வில்வேந்திரனை நேற்று கைது செய்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

The post மாணவி கர்ப்பம்: ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: