இதை தொடர்ந்து டெல்லி பல்கலை சார்பில் கேபி சிங் என்பவர் நேற்று ராகுல்காந்திக்கு 2 பக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: டெல்லி பல்கலைக்கழக முதுநிலை ஆண்கள் விடுதிக்கு நீங்கள் திடீரென வருகை தந்தது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தேசியக் கட்சித் தலைவரிடமிருந்து இதுபோன்ற நடத்தையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளவர். அப்படி இருக்கையில் இந்த சம்பவம் அத்துமீறல் மற்றும் பொறுப்பற்ற நடத்தைக்கு சமம்.
எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் விலகி இருக்க வேண்டும். உங்கள் வருகை விடுதியின் விதிமுறைகளை மீறிவிட்டது. விதிகளுக்கு முரணான எந்தவொரு செயலையும் நிறுத்துவதற்கான உரிமையை விடுதி நிர்வாகம் கொண்டுள்ளது. இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
The post மாணவர் விடுதிக்கு திடீர் வருகை; ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: டெல்லி பல்கலை. அதிரடி appeared first on Dinakaran.