பின்னர் மீண்டும் அவர் வந்து பார்த்த போது காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அரியலூர் காவல் நிலையத்தில் இளவழகன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது செந்துறை சாலையிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த மோசா (33) என்பதும், இளவழகன் வங்கியில் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்டதோடு அவரை பின் தொடர்ந்து வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மோசாவை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோசா அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.