இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகி இருந்தனர். அப்போது சிபிசிஐடி போலீசார், கோவை ஆய்வகத்தில் இருந்து பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரிடம் 8 செல்போன், 4 சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்போன்கள், சிம்கார்டுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் 8,000 பக்கங்கள் உள்ளது. 8,000 பக்கங்கள் கொண்ட தகவல்களை முழுமையாக படிக்க சிபிசிஐடி தரப்பு அவகாசம் வேண்டும் என்று கோரியது. சிபிசிஐடி தரப்பு கால அவகாசம் கோரியதை பதிவு செய்த நீதிபதி வழக்கின் விசாரணை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப்.9க்கு ஒத்திவைத்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.