நடிகர் தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையிடுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

சென்னை: நடிகர் தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையிடுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி உள்ளதாக ஃபெப்சி செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வருகிறது. எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை கூறியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

The post நடிகர் தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையிடுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: