சுகாதாரம் மற்றும் கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைத்ததை கண்டித்தும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 கணக்கான மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பேரணியை தடுக்க முயன்ற போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. மாணவர்களை தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் விரட்டியடிக்க முயன்றனர். இதனை அடுத்து காவல்துறையினர் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்கினர். காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த இந்த வன்முறையால் கொழும்பு நகரமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தல்: மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது appeared first on Dinakaran.