கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர் மற்றும் உறைபனி இன்னும் பல தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். உறைபனி காரணமாக கொடைக்கானலில் மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பட்டாணி, கேரட், பீட்ரூட், நூல்கோல், முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, மலைப்பூண்டு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக பனிக்காலம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கி ஜனவரியில் குறைய தொடங்கும். ஆனால், தற்போது காலதாமதமாக தொடங்கிய பனி காலம் இந்த மாதம் முழுவதும் நீடிக்கும் என்று தெரிகிறது.
The post பனிப் போர்வையில் ‘கொடை’ வனம்; 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை.! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.