* கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே அணியிடம் 0-1 என தோற்ற அமெரிக்கா ஏமாற்றத்துடன் வெளியேறியது. மற்றொரு சி பிரிவு ஆட்டத்தில் பொலிவியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பனாமா அணி காலிறுதிக்கு முன்னேறியது.
* ‘கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடருடன் எனது 2 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், ரோகித் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாலேயே டி20 உலக கோப்பை வரை பணியாற்றினேன். அதற்காக ரோகித்துக்கு நன்றி’ என தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
* டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி துணை கேப்டனும் வேகப் பந்துவீச்சாளருமான டஸ்கின் அகமது விளையாடவில்லை. ஆன்டிகுவாவில் நடந்த அப்போட்டியில் இந்தியா 50 ரன் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேச அணியின் பந்துவீச்சு வியூகம் விமர்சனத்துக்குள்ளானதுடன், பயிற்சியாளருக்கும் டஸ்கின் அகமதுவுக்கும் இடையே வெடித்த மோதல் காரணமாகவே அவர் நீக்கப்பட்டதாகவும் பேச்சு எழுந்தது. இந்த நிலையில், போட்டி நாளன்று டஸ்கின் நீண்ட நேரம் அசந்து தூங்கிவிட்டதாகவும், செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.