காஞ்சிபுரத்தில் மதிமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: மல்லை சத்யா பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி, மதிமுக சார்பில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக சார்பில், தமிழக அரசையும், மக்களையும் அனுதினமும் கொச்சைப்படுத்தும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா கலந்துகொண்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி முதல் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன், காஞ்சிபுரம் துணை மேயர் குமரகுருநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், திருமாதாசன், டேவிட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், சிஜடியு மாநில செயலாளர் முத்துக்குமார், விவசாய சங்க தலைவர் நேரு, சிபிஐ கட்சியின் பொறுப்பாளர்கள் சீனிவாசன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பொன்மொழி,

மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் தாஜுதீன், சம்சுதீன், திராவிட கழக மாவட்ட செயலாளர் அசோகன், மதிமுக காஞ்சிபுரம் நகர செயலாளர் மகேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் அருள், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் கருணாகரன், காஞ்சி ஒன்றிய செயலாளர்கள் ராவணன், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் சிவகுமார், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், காஞ்சிபுரம் மாணவர் அணி சுரேஷ், இளைஞர் அணி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அண்ணா இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சென்று வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பு மக்களிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கையெழுத்து பெற்று, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

The post காஞ்சிபுரத்தில் மதிமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: மல்லை சத்யா பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: