மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். ஆண்டிபட்டி அருகே சந்தைப்பேட்டை கால்நடை சந்தையிலும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மகா சிவராத்திரி தினத்தில் குலதெய்வ படையலுக்காகவும், தொடர்ந்து வரும் முகூர்த்த நாட்களிலும் நடைபெறும் விஷேசங்களுக்காகவும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றதால் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது.
The post சிவராத்திரியை ஒட்டி களைகட்டிய கால்நடைச் சந்தைகள்: ஆண்டிபட்டி சந்தைப்பேட்டையில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.
