உடனே அதிரடியாக பெண் போலீசார் உதவியுடன் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்திய போது, மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலியல் புரோக்கர் புவனேஸ்வரி(53) 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.உடனே, போலீசார் புவனேஸ்வரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட பெண் புரோக்கரை போலீசார் நீதிமன்றம் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
The post தனியாக வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த பெண் புரோக்கர் கைது appeared first on Dinakaran.
