இதனையறிந்த கொலை வழக்கு குற்றவாளியான மதன் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் பறித்துச்சென்றுள்ளார். தொடர்ந்து, நேற்று முன்தினம் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் நடந்து வந்த சென்னை மாத்தூரை சேர்ந்த சேகர்(50) என்பவரை கத்தி காட்டி மிரட்டி 1500 ரூபாயை மதன் பறித்துள்ளனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கு குற்றவாளியாக இருந்துகொண்டு, வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்த குற்றவாளி மதனை நேற்று கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post தொடர் வழிப்பறி, 2 கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது: மீஞ்சூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.