ஆனால் பாமகவில் அன்புமணி பாஜ பக்கம் சாய்ந்துள்ள நிலையில், நிறுவனர் ராமதாஸ் பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்று பிடிவாதமாக உள்ளார். இதனால் அவரை சமாதானம் செய்ய பாஜ தூதர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையிலும் எந்த பிடியும் கொடுக்காமல் சாதுர்யமாக காய்நகர்த்தி வருகிறார். இதனால் பாமகவை சிதைக்க சில நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவின. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மதியம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இருவரும் பேசினர்.
The post ராமதாசுடன் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.
