ஆனால் திமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று கூறி காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. பொது அமைதியை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் மேல்முறையீட்டு வழக்கு நவம்பர் 3-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
The post பொது அமைதியை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் : தமிழக அரசு மேல்முறையீடு!! appeared first on Dinakaran.