ஆனால், இன்று வெளியான புகைப்படங்களையும், அதில் போடப்பட்ட தலைப்புகளையும் பார்த்தபோது உண்மை எதுவென உலகுக்கு தெரிந்தது. 18 ஆண்டுகளாக எனக்கு அன்பிலும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் என்னை மட்டும் விட்டுச்செல்லவில்லை. எனக்கு அளித்த வாக்குறுதிகளில் மற்றும் பொறுப்புகளில் இருந்தும் விலகிச் சென்றுள்ளார். எங்களது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டப்படி நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை. அதுவரை எனது இன்ஸ்டாவில் என் பெயர் ஆர்த்தி ரவி என்றுதான் இருக்கும்.
என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என ஊடகத்திடம் சொல்லி கொள்கிறேன். ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது கடமையில் இருந்து தவறி 2 மகன்களையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தாயின் போராட்டம். இரண்டு குழந்தைகள் இன்றும் உங்களை அப்பா என்று தான் அழைக்கிறார்கள். அவர்களுக்காக நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post பாடகியுடன் வந்த ரவிமோகன்: மனைவி ஆர்த்தி ஆவேசம் appeared first on Dinakaran.
